News Just In

1/31/2022 06:26:00 AM

மின் துண்டிப்பு மீண்டும் இடம்பெறுமா? இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும்!

இன்றைய தினம் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது. இதற்கமைய, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இன்றைய தினம் மீண்டும் கூடி மின் துண்டிப்பை அமுலாக்குவதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியை இன்றைய தினம் முதல் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

900 மெகாவோட் உற்பத்தி செய்யும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் மின் பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் 3ம் திகதி செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: