News Just In

1/30/2022 06:46:00 AM

கட்டுமுறிவு மக்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அதிகஷ்டப் பிரதேசங்களான கட்டுமுறிவு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வானது நேற்று (29) கட்டுமுறிவு சக்தி முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் உட்பட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.ஶ்ரீநேசன் வாகரை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சி.கோணலிங்கம், வாகரை பிரதேச சபை உறுப்பினர் க.விஷ்வநாதன், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பகிரதன், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன், வாலிபர் முன்னணியின் செயலாளர் சசீந்திரன், யுகா கலைக் கழகத்தின் தலைவர் எழில்வண்ணன் மற்றும் வாலிபர் முன்னணியின் உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.












No comments: