News Just In

1/19/2022 06:27:00 AM

தலவாக்கலை - அக்கரப்பத்தனையில் உள்ள மூன்று ஆலயங்களில் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!

தலவாக்கலை - அக்கரப்பத்தனையில் உள்ள மூன்று ஆலயங்களில் இன்று பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன அக்கரப்பத்தனை - சின்னதோட்டம், பச்சைபங்களா மற்றும், உருலேக்கர் ஆகிய தோட்டங்களில் உள்ள ஆலயங்களே உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில், ஆலய பரிபாலன சபையினால் காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினர், நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, அக்கரப்பத்தனை நகர் பகுதியில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில், நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரப்பத்தனை காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

No comments: