News Just In

1/30/2022 08:51:00 PM

அக்கரைப்பற்று புகைப்படத் திருவிழா" ஆரம்பித்தது!

Club Photo Ceylonica ஏற்பாட்டில் இடம்பெறும் "அக்கரைப்பற்று புகைப்படத் திருவிழா" நேற்று(29) அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் மண்டபத்தில் மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்றைய முதல் நாள் நிகழ்வுகள் புகைப்படக் கலைஞரும், விழா ஏற்பாட்டாளருமான அப்துல் ஹமீட் தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. முதல் நாள் நிகழ்வுகளின் பிரதம அதிதியாக கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Club Photo Ceylonica அமைப்பானது எமது பிராந்திய புகைப்பட கலைஞர்களின் திறமைகளை போட்டிகள் மற்றும் கண்காட்சிகள் வாயிலாக வெளிக்கொணர்ந்து அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளை வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்திருவிழாவில் சர்வதேச புகைப்படப் போட்டிகள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண புகைப்படக் கலைஞர்களிடையே வெற்றி பெற்ற புகைப்படக் கலைஞர்களின் படைப்புக்கள்,அக்கரைப்பற்று வரலாற்றுடன் தொடர்புடைய அரிதான பல பழைய புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நூருள் ஹுதா உமர்






No comments: