News Just In

1/15/2022 06:07:00 PM

ஓட்டமாவடி ஆற்றில் மிதந்தது சடலமா? இரு படகுகளில் தேடும் பணிகள் தீவிரம்!

ஓட்டமாவடி பாலத்தின் கீழுள்ள ஆற்றில் இன்று (15) பிற்பகல் 2 மணியளவில் சடலம் ஒன்று மிதந்ததாக பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தினால் நபரொருவர் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதைப் போன்று கண்டுள்ளார்.

அந்நபரின் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன், கல்குடா சுழியோடிகள் இரண்டு படகுகளில் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆற்றில் மிதந்தது சடலம்தானா? என தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வரும் சுழியோடிகள் மத்தியில் சந்தேகம் நிலவியுள்ளது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)







No comments: