News Just In

1/31/2022 02:13:00 PM

சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்த புதிய தீர்மானம்


தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் சுற்றறிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோயை தடுப்பது தொடர்பான சுற்றறிக்கை பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அவ்வப்போது புதுப்பித்து வருகிறோம். தற்போது அமுலில் உள்ள டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல் சுற்றறிக்கை ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அதனை பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார். இதேவேளை, இதுவரை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.



No comments: