News Just In

1/18/2022 06:42:00 AM

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதியில் நேற்று 28 லட்சம் ரூபா வருமானம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதியில் நேற்று மதியம் 12 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியில் 28 லட்சத்து 5 ஆயிரத்து 100 ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் பயணித்த 13 ஆயிரத்து 583 வாகனங்களிடம் இருந்து இந்த கட்டணம் அறவிடப்பட்டதாக அதிவேக நெடுஞ்சாலையின் கண்காணிப்புக்கான பதில் பணிப்பாளர் குறிப்பிடடார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி நேற்று முன்தினம் திறக்கப்பட்டதோடு நேற்று மதியம் 12 மணிவரை கட்டணமின்றி பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குறித்த வீதி திறக்கப்பட்டமையை அடுத்து அந்த வீதியில் பயணிப்பதற்கு அதிகளவான வாகனங்கள் சென்றமையால் மீரிகம நுழைவு பகுதியில் வாகன நெரிசல் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments: