News Just In

1/13/2022 08:09:00 PM

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது துணைவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் நியமனம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது துணைவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரான்குளம் கிராமத்திலிருந்து தனது கடும் உழைப்பாலும் இடை விடாத முயற்சியாலும், இன்றைய உயர் நிலையை இவர் அடைந்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இவர் தொடர்ந்து விரிவுரையாளராகவும், அதனைத் தொடர்ந்து வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதியாகவும் செயற்பட்டார்.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை வளாகத்தின் இயக்குனராக செயல்பட்டு அதன் இன்றைய வளர்ச்சிக்கு தனது பாரிய பங்களிப்பை நல்கியிருந்தார். இவரது காலத்தில் திருகோணமலை வளாகம் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான முழு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் ஜனவரி 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வண்ணம் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தராக கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இவரது காலத்தில் இப்பல்கலைக்கழகம் பல அபிவிருத்திகளையும், கல்வியில் எழுச்சியையும் பெறும் என பல்கலைக்கழக கல்விச்சமுகம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

.எச்.ஹுஸைன் 

No comments: