ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தேசிய தேகாரோக்கிய வேலைத்திட்டத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் உடற்பயிற்சிப் பாசறை செவ்வாய்க்கிழமை 21.12.2021 ஆரம்பித்துவைக்கப்பட்டது.காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் இப்பயிற்சி நெறியை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வைபவரீதியாக துவக்கி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் இப்பயிற்சிப்பட்டறை விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெறுகிறது.இதில் மாவட்டத்திலுள்ள சகல திணைக்களங்களின் சார்பிலும் இவ்விரு உத்தியோகத்தர்கள் இணைத்துக் னொள்ளப்பட்டு அவர்களுக்கு வழிகாட்டல் பயிற்சி வழங்கப்படுகிறது.
இங்கு வழங்கப்படும் உடற்பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்கள் தமது தினைக்களத்தில் கடமையாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்பதுடன் தொடர்ச்சியாக இதனை நடைமுறைப்படுத்துவதனூடாக ஆரோக்கியமான சமுகமொன்றை கட்டியெழுப்பமுடியும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள திட்ட உத்தியோகத்தர் கே.எம்.எச். பண்டார மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லெப்பை விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் பயிற்சியாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். விவேகானந்தன் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கணேஸ் விக்கிரமநாயக யோகா பயிற்றுவிப்பாளர் வை. பத்மராஜா ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.
No comments: