அரசாங்கத்தின் செளபாக்கிய தூரநோக்கு திட்டத்திற்கு அமைவாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்ட கொக்குவில் புதிய பொலிஸ் நிலையம் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எச்.சுதத் மாசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கமல் சில்வாவினால் 12.12.2021 ஆந் திகதி திறந்து வைக்கப்பட்டது.
மத தலைவர்களின் ஆசியுரையுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கொக்குவில் பொலிஸ் நிலைய கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டதுஇதன் பின்னர் அதிதிகளினால் பொலிஸ் நிலைய வளாகத்தினுள் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: