News Just In

12/13/2021 11:06:00 AM

மனித உரிமையும் ஊடக சுதந்திரமும் விழிப்புணர்வு நிகழ்வு!





கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மனித உரிமையும் ஊடக சுதந்திரமும் எனும் தொனிப் பொருளிலான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12.12.2021) மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ. தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களைப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் ஊடகவிலாளர்கள் மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிங்கள ஊடகவியலாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக இடம்பெற்ற நிகழ்வில் இணைய வழி ஊடகவியலாளர்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரட்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன்இ எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும்இணைய தொழில்சார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடி கமகே எடுத்துரைத்தார்.

சிவில் சமூக செயற்பாட்டார்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்ததாக இடம்பெற்ற இரண்டாவது அமர்வில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.மனித உரிமைகள் தொடர்பாக திறந்த பல்கலைக் கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர் ராதா ஞானரெட்னம் மனித உரிமையும் முஸ்லிம் சமூகமும் எனும் தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மொழிபெயர்ப்பாளரும் பல்துறைக் கலைஞருமான எம்.ஐ. பாறூக் ஆகியோர் உரையாற்றினர்.

மேலும் பெண் உரிமை தொடர்பில் சேதிஸ்வரி யோகதாஸ் கருத்துத் தெரிவித்ததுடன் மனித உரிமை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய முன்னாள் இணைப்பாளரும் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றிய இணைப்பாளருமான ஆர். மனோகரன் உட்பட சிரேஸ்ட ஊடகவியலாயர் இ. பாக்கியராசா ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.

இறுதியாக மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மெழுகுவர்த்தி சுடரேற்றி மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.

.எச்.ஹுஸைன்



No comments: