News Just In

12/21/2021 07:41:00 PM

சாதாரண தர பரீட்சை - தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு!

2021 (2022) வருடத்திற்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள பரீட்சாத்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக மேற்கொள்ளும் முறை குறித்து இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தனிப்பட்ட பரீட்சாத்திகளின் விண்ணப்பங்கள் 2021.12.20 ஆம் திகதி தொடக்கம் 2022.01.20 ஆம் திகதி வரையில் இணையவழி ஊடாக கோரப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.

இதற்காக விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் ஆலோசனை மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www..doenets.lk அல்லது Exams SRI LANKA என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கையடக்க தொலைபேசி மூலம் அல்லது https://onlineecams.gov.lk/eic இணையத்தளத்தில் பிரவேசிக்க முடியும்.

No comments: