News Just In

12/14/2021 06:45:00 AM

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதியில்லை : நாடகமே அரங்கேற்றப்படுகிறது என்கிறார் பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முறையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் செயற்படுத்தப்படவில்லை. மாறாக நாடகமொன்று மாத்திரமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவதாகக் கூறியவர்கள் நத்தார் தினத்தன்று மதுபான விற்பனைக்கு அனுமதி கோருகின்றனர். இதன்மூலம் நத்தார் தினத்தையும் இழிவுபடுத்துகின்றனர். இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? இதுவா சுபீட்சத்தின் நோக்கு? என்றும் பேராயர் கேள்வியெழுப்பினார். கனேமுல்ல தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிறு ஆராதனையின்போது அவர் இதனை  தெரிவித்தார் ,


No comments: