News Just In

11/19/2021 01:40:00 PM

ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர் அணியில் புதிய அங்கத்தவர்கள் இணைதலும், விசேட கலந்துரையாடலும்!

ஐக்கிய இளைஞர் சக்தியில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் புதிய அங்கத்தவர்கள் இணைதலும், எதிர்கால கட்சி முன்னெடுப்புகள் பற்றிய கலந்துரையாடலும் வியாழக்கிழமை (18) இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய இளைஞர் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளருமானமுகம்மட் சர்பான் தலைமையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயலாளரும் அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் மேலும் அம்பாறை மாவட்ட செயற்குழு முக்கியஸ்தரும், பொத்துவில் பிரதேச அமைப்பாளருமான ஆஷிக் சுபைரும் கலந்து கொண்டார்.

அப்பிரதேச இளைஞர்களின் எதிர்காலச் செயற்றிட்டங்கள் பற்றி மிகச் சிறப்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது அங்கத்துவப்படிவத்தைக் கையளித்து அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனர். அத்துடன் எதிர்காலத்தில் தாங்கள் ஐக்கிய இளைஞர் சக்தியோடு கைகோர்த்துச் செயற்படத் தயாராக உள்ளதாகவும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களும் இதன்போது உறுதியளித்தனர்.

(நூருல் ஹுதா உமர், எம்.எஸ்.எம்.ஸாகிர்)





No comments: