News Just In

11/23/2021 04:05:00 PM

கிண்ணியா படகு விபத்துச் சம்பவத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் வெள்ளைக் கொடிகள்!

கிண்ணியாவில் இன்று (23) நிகழ்ந்த படகு விபத்துச் சம்பவத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டம் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவைப் படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்தவகையில், வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினர் இச் சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளதுடன், வாழைச்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் வெள்ளைக் கொடிகள் கட்டி பறக்க விடப்பட்டுள்ளன.

(எச்.எம்.எம்.பர்ஸான்)





No comments: