விளையாட்டு மூலம் மத நல்லிணக்கத்தினையும் சமூக ஒற்றுமையினையும் ஊக்குவித்தல், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் மற்றும் நல்லிணக்கத்தை ஸ்திரப்படுத்தல் ஆகிய நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 16.11.2021 மட்டக்களப்பு தன்னாமுனையில் இடம்பெற்றது.
விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டிய இளைஞர் யுவதிகள் உட்பட முன்பள்ளி ஆசிரியர்களுமாக சுமார் 90 பேர் 6 மாத கால செயன்முறைப் பயிற்சியில் பங்குபற்றியிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவு விளையாட்டு உத்தியோகத்தர் கே. சங்கீதா அப்பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். சர்ஜுன் ஏறாவூர நகர பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் இஸ்மாயில் நபீலா உட்பட இன்னும் பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: