இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட முகக்கவசத்தை பீபா தலைவர் அணிந்திருக்கும் புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பன்டினோ, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் மகிந்த ராஜபக்ஷ கிண்ணத்திற்காக, நான்கு நாடுகள் பங்கேற்கும் இறுதிப் போட்டியில் இவர் விசேட அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
இதில் வெற்றிபெறும் குழுவுக்கு 30 ஆயிரம் அமெரிக்கா டொலர்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியபோது இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட முகக்கவசம் அணிந்திருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
No comments: