மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய உப்போடை வாவி கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றை இனம் தெரியாவர்கள் தீவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி இயந்திர படகு ஒன்றுடன் வலைகள் முற்றாக எரிந்து சாம்பலாகிய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (04) அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாவிக்கரையில் நேற்று வழமைபோல கடலில் மீன்பிடிக்க சென்று திரும்பி வந்து இயந்திர படகை கரையில் வலைகளுடன் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று, பின்னர் இன்று காலை சுமார் 5 மணியளவில் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு செல்வதற்காக வந்தபோது படகு தீயில் எரிந்து சாம்பலாகிய நிலையில் இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: