News Just In

9/16/2021 02:38:00 PM

ஈழத்தின் மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்...!!


(ஹஸ்பர் ஏ ஹலீம் )
ஈழத்தின் மிக முக்கியமான மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் (வயது - 72) இன்று (16) திருகோணமலையில் காலமானார்.

யாழ்ப்பாணம் மட்டுவில் சாவக்கச்சேரியில் 1949-05-25 ல் பிறந்த இவர் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவர் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலக்கியமே மூச்சு, வாசிப்பு என்று வாழ்ந்து கொண்டிருந்தவர்.

கொடகே தேசிய சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, கலாபூசணம் அரச உயர் விருது ஆகிய உயர் விருதுகளை பெற்றவர்.

அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், நெல்லிமரப்பள்ளிக்கூடம் இரண்டும் அவரது மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள்.

ஈழத்து இலக்கியத்தை எமுதும் எவரும் நந்தினி சேவியர் என்ற பெயரை தவிர்க்கவியலாது என்பதே அவரது அடையாளம்.

No comments: