News Just In

8/13/2021 07:01:00 PM

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பகுதியில் கைகுண்டுடன் இளைஞன் கைது...!!


மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பகுதியில் இன்று(13) கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

விநாயகபுரம் அம்பாறையை சேர்ந்த விஜயராசா பிரசாந்தன் எனும் 34 வயது மதிக்க தக்க இளைஞனே கைது செய்யப்ட்டுள்ளார் .

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போதே இன்று காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டபோது கைகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்வாரிடம் இருந்து 1 கைகுண்டும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டத்துடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: