நாட்டில் இன்று (16) முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இவ்வாறான பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறிவருவது கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும் எனவேதான் இரவு நேரங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments: