News Just In

8/12/2021 07:31:00 AM

ஓட்டமாவடி ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல்...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஓட்டமாவடி மூன்றாம் வட்டார மின்னத் மீன்பிடி சங்கத் தலைவர் ஏ.ஏ.சலீம் தெரிவித்தார்.

எமது மீனவர்கள் ஓட்டமாவடி பாலத்தை தாண்டி தியாவட்டவான் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது அந்த பகுதியிலுள்ள ஆற்றில் சிலர் முட்கம்பிகளை போட்டு எங்களது மீன்பிடி தொழிலுக்கு சதிகளை ஏற்படுத்துகின்றனர்.

எமது மீனவர்கள் வலை வீசும் போது முட்கம்பிகளில் வலைகள் சிக்கி பெறுமதியான வலைகள் சேதமடைந்துள்ளன.

அத்தோடு, வலைகளை மீட்கும் போது மீனவர்களுக்கு கம்பிகள் கிழித்து காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று சங்கத் தலைவர் ஏ.ஏ.சலீம் மேலும் தெரிவித்தார்.

இரவு நேரங்களில் தாம் குறித்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கரைகளில் நின்று எங்கள் மீது கல் வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்வதாகவும், தகாத வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு ஏசுவதாகவும் மின்னத் மீன்பிடி சங்கத் தலைவர் ஏ.ஏ.சலீம் தெரிவித்தார்.
வலைகள் சேதமடைந்த நிலையில் தமது தொழில்களை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் தாம் தொழிலின்றி பாதிப்படைந்துள்ளதோடு, இந் நாசகார செயல்களை செய்யும் நபர்களை கண்டுபிடித்து தாம் தொடர்ந்தும் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடற்றொழில் பரிசோதகரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் சங்கத் தலைவர் தெரிவித்தார்.







No comments: