News Just In

8/27/2021 12:20:00 PM

சீனக்குடா பகுதியில் வீதி மின் விளக்குகள் திருத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு...!!


(எப்.முபாரக்)
திருகோணமலை ,சீனக்குடா பிரதேசத்தில் பல வருட காலமாக பொருத்தப்படாமலும் செயழிலந்தும் காணப்பட்ட வீதி மின் விளக்குகள் திருத்தப்பட்டு மீண்டும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இப் பிரதேசத்தில் முக்கிய இடங்களில் வீதி மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை எனவும் சில இடங்களில் செயழிலந்து காணப்படுவதாகவும் பொதுமக்களும் சங்கங்களும் திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை உப-தவிசாளர் ஏ.எல்.எம்.முகம்மட் நௌபாரிடம் முறையிட்டு இருந்தனர்.

அதனை நேரில் சென்று பார்வையிட்டதுடன் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் மூலம் சீனக்குடா பிரதேசத்தில் பழுதடைந்துள்ள வீதி மின்விளக்குகள் திருத்தப்பட்டும் ஏனைய பகுதிகளில் புதிய மின் இணைப்புக்கள் வழங்கி மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டது.

இதன்போது எஞ்சிய வேலைகளை அடுத்த கட்டமாக தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.



No comments: