News Just In

8/15/2021 02:28:00 PM

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இருவர் கைது- பொது மக்களுக்கு எச்சரிக்கை...!!


போலி நாணயத்தாள்களை அச்சிடும் கருவி ஒன்றை வைத்திருந்தமை மற்றும் கொடுக்கல் வாங்களில் ஈடுபட்டமை தொடர்பில் இருவரை கிரான்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 100 ரூபா போலி நாணயத்தாள்கள் 25, 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 18 மற்றும் 1000 போலி நாணயத்தாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் பணப்பயன்பாட்டின் போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments: