News Just In

8/01/2021 08:47:00 PM

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தினை மையப்படுத்தி கங்கதலாவ ஊடக அமைப்பொன்று புதிதாக உதயம்!!

(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தினை மையப்படுத்தி கங்கதலாவ ஊடக அமைப்பொன்று புதிதாக உதயமாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பதற்காக புதிய ஊடகவியலாளர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கங்கதலாவ ஊடக அமைப்பின் 2021/2023 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளாக அமைப்பின் தலைவராக மஹிந்த சேனாரத்தினவும்,(அருன), உப தலைவர் துசார சந்தன சேனாதீர(லங்காதீப) செயலாளராக மனுசங்க காரியவசம்(சிரச டிவி),உப செயலாளர் எச்.எம்.யூசுப்( ஐடிஎன், வசந்தம் டிவி), சுகத் விஜயகுமார(திவையின), பொருளாளராக அமதுரு அமரஜீவ(லங்காதீப), உறுப்பினர்கள் ஏ.ஆர்.எம்.சாகித்(தளம் வெப்சைட்), பிரியந்த குமார போகவத்த(சிரச டிவி), மற்றும் ஆலோசகர்களாக ஆர்.ஜி தர்மதாச(பிபிசி), மற்றும் கே.டி.விஜயபால(ரூபாவாஹினி,ஐடிஎன்)
போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு சங்கம் இயங்கி வருகின்ற நிலையில்,கங்கதலாவ ஊடகவியலாளர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments: