(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தனின் 46வது பிறந்த நாளை முன்னிட்டு இரத்தான நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில்; மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்; அங்கத்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானத்தினை வழங்கி வைத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் நிரோசன் லோரன்ஸ் தலைமையிலான வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தம் பற்றாக்குறையாக காணப்படும் நிலையில் சுகாதார விதிமுறைக்கமைய இரத்த தானத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டதாக வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.
No comments: