News Just In

8/08/2021 12:32:00 PM

மூதூர் பிரதேசத்தில் சேதன உரத்தினால் மேட்டு நிலப் பயிர்ச் செய்கை வெற்றி...!!


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் சேதனப் பசளை மூலமாக மேற்கொள்ளப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச் செய்கை வெற்றியளித்துள்ளது. 

கடந்த யுத்த காலத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட இப் பிரதேசம் விவசாய செய்கை மூலமாக நஞ்ஞற்ற உணவு உற்பத்தி நடை பெற்று வருகிறது. முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய விவசாயியுமான கே.நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் செய்யப்பட்ட வெங்காயம்,கத்தரி, மிளகாய் போன்ற பயிர்ச் செய்கை வெற்றி கண்டுள்ளது. சேதனை பசளை மூலமான பயிர் செய்கை தொடர்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

பயிர்களுக்கு அடிப்படை தேவையானது சேதன உரம் தான் ஆரம்பத்தில் மாட்டு எரு மூலமாக இவ் சேதனை பசளையை பயன்படுத்தியே தற்போது அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. வெங்காய செய்கை பெரிதும் வெற்றி கண்டு வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் சிறந்த விவசாயியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என்றார்.





No comments: