மட்டக்களப்பு மாட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவமானது இவ்வருடம் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தீவிர தன்மை காரணமாகவே இந்த வருடத்திற்கான கொடியேற்ற திருவிழா, தேரோட்ட திருவிழா, திருவேட்டை திருவிழா மற்றும் தீர்த்த திருவிழா உள்ளிட்ட எந்த திருவிழாவும் இடம்பெற மாட்டாது என கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாக சபை அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற தேசத்து ஆலயமாக உள்ள குறித்த ஆலயத்தின் திருவிழா காலங்களில் அடியவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அடியவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே இறைவனை நினைத்து வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments: