News Just In

8/16/2021 06:54:00 AM

இன்று இரவு முதல் அமுலுக்கு வரும் ஊரடங்கு உத்தரவு...!!


இன்று(16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரையில் இந்த தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

அதேபோல், குறித்த சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

No comments: