News Just In

8/04/2021 10:11:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் தீ விபத்து- பொருட்களும் பணமும் தீயில் சாம்பலாகின...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் வீதியில் அமைந்துள்ள ஒரு குடும்பத்தினர் வசித்து வந்த கடை ஒன்று நேற்றிரவு (3) தீப்பிடித்துள்ளது.

தாம் வசித்து வந்த கடையை மூடிவிட்டு குடும்ப உறவினர்களின் வீட்டுக்குச் சென்று வந்த போது கடை தீயில் எரிந்துள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த கடையில் இருந்த பெறுமதியான மின் பாவனைப் பொருட்களும், வீட்டுத் தளபாடங்களும் மற்றும் அங்கிருந்த சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணமும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் நகைகள் சில தீயில் உருகியுள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments: