(மட்டக்களப்பு அப்துல் லத்தீப்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனை பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குழாய் நீர் விநியோகத் திட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அங்கீகாரத்தில் தேசிய நீர் வழங்கல் அதிகார சபை இப்பிர தேசத்தில் புதிய குடிநீர் விநியோகத் திட்டத்தை தற்பொழுது ஆரம்பித்துள்ளது.
இந்த விஷேட திட்டத்தினூடாக இப்பிரதேச மக்க ளுக்கு குடிநீர் வழங்கும் விநியோகதிட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குடிநீர் விநியோக திட்டத்தினை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் எந்திரி எம்.குமாரதாஸ் ஏறாவூர்பற்று பிரதேசத்திற்கான நீர் வழங்கல் திட்டத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் மயில்வாகனம் தெய்வேந்திரன் உட்பட பல பிரமுகர்கள் இங்கு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments: