News Just In

8/25/2021 06:46:00 PM

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது...!!


நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 400, 000ஐ கடந்துள்ளது.

நேற்று வரையில், தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 398, 801 ஆக காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளில், தாமதமான முடிவுகளில் மேலும் 4, 484 பேருக்கு தொற்றுறுதியானதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 403, 285 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கொவிட் தொற்று பரவலின் ஆரம்பத்திலிருந்து 400,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட உலகின் 60 ஆவது நாடாக இலங்கை மாறியுள்ளது.

No comments: