News Just In

8/18/2021 07:45:00 AM

ஒரே நாளில் 171 பேர் கொரோனாவுக்கு பலி- மொத்த எண்ணிக்கை 6434ஆக அதிகரிப்பு...!!


நாட்டில் நேற்று முன்தினம்(16.8.2021) மேலும் 171 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை மொத்தமாக 6,434 பேர் நாட்டில் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நேற்று 16 ஆம் திகதி கொவிட் தொற்றுக்குள்ளாகி 171 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 102 ஆண்களும் 69 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

30 வயதிற்கு கீழ் இரு ஆண்களும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 23 ஆண்களும் 12 பெண்களுமாக 35 பேரும், 60 வயதும் அதற்கு மேற்பட்டோரில் 77 ஆண்களும் 57 பெண்களுமாக 134 பேர் இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இன்றையதினம் 3,555 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: