News Just In

8/13/2021 06:35:00 AM

கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 156பேர் உயிரிழப்பு...!!


நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம்(11) மேலும் 156 உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாக சுகாதார அமைச்சகத்தினால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்ட அதிகளவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை  இதுவாகும்.

இதனால் இலங்கையில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


No comments: