News Just In

7/11/2021 09:00:00 AM

உடன் அமுலுக்கு வரும் வகையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்- சில கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு...!!


நாட்டில் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் இன்று(11) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொட ஆராமய பகுதியின் 66ஆம் தோட்டமும் மேலும் 2 கிராம சேவகர் பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தின் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


No comments: