News Just In

7/11/2021 09:09:00 AM

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் தெரிவு!!


மட்டக்களப்பு மாவட் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் தெரிவு நிகழ்வானது இன்று கட்சியின் இருதயபுரத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்ட தலைமைக்காரிலயத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுக்களின் பிரதித்தலைவருமான பா.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்போது மாவட்டத்தின் கல்குடா, மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்பு தொகுதிகளுக்கான இளைஞர் தெரிவே இதன்போது இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் இலங்கை மக்கள் இளைஞர் முன்னனியின் தலைவருமாகிய டி.வி.சானக, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஸ்ரீலங்கா பொதுஜன இளைஞர்கள் முன்னணியின் செயலாளருமான நிபுன ரணவக மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பின்தங்கிய கிராமிய இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின்போது மூன்று தொகுதிகளிலுமிருந்து வருகைதந்திருந்த இளைஞர்களிடமிருந்து தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், வருகை தந்திருந்த அதிதிகளால் இவ்வாறான பிரச்சனைகளுக்கு எதிர்காலத்தில் எவ்வாறான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியுமெனவும் தெரிவித்திருந்தார்கள்.









No comments: