ஓட்டமாவடி எஸ்.எம்.ரீ.ஹாஜியார் வீதியில் வீட்டில் வைத்து 41 வயதுடைய பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய புலனய்பு பிரிவினரும் வாழைச்சேனை பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே மேற்படி சந்தேக நபர்;; கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் நான்கு கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவருடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுர பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் ஓட்டமாவடியில் திருமணம் முடித்துள்ளார் என்றும், இவர் பிரபல போதைவஸ்து வியாபாரி என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments: