News Just In

7/06/2021 08:06:00 AM

செம்மண்ணோடை பிரதேசம் முழுவதற்கும் நிவாரணப் பொதிகள் வழங்க ஏற்பாடு...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பிரதேசம் முழுவதற்கும் நிவாரணப் பொதிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த பிரதேச மக்கள் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு இவ் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

செம்மண்ணோடை பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் ஒன்றியம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி தெரிவித்தார்.

குறித்த நிவாரணப் பணி ஏழைகள், பணக்காரர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பாகுபாடின்றி அனைவருக்குமாக வழங்கப்படவுள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களில் மக்களின் காலடிக்குச் சென்று குறித்த நிவாரண உதவிகளை வழங்கி வைக்க ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பணியை முன்னெடுக்க பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உதவிய அனைவருக்கும் ஒன்றியம் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவிப்பதாக ஒன்றியத்தின் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி தெரிவித்தார்.






No comments: