News Just In

7/10/2021 07:26:00 PM

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் வீடுகள் கையளிப்பு...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்ற தொனிப் பொருளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மற்றும் காவத்தமுனை பிரதேசங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் இன்று (10) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நசீர் அஹமட், இஸ்ஹாக் ரகுமான் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.





No comments: