News Just In

7/20/2021 07:26:00 AM

இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் சில பகுதிகள்...!!!


நாட்டில் தொடர்ந்து நிலவும் கொரோனா தொற்று நிலை காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்த்தொட்ட காவல்துறைப் பிரிவில் உள்ள யட்டிவாவல கிராம சேவகர் பிரிவின் சாகரதெனிய வத்தையும், களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு காவல்துறைப் பிரிவின் குடா வஸ்கடுவ மேற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


No comments: