மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையினால் எடுப்பப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மயிலம்பாவெளி , சவுக்கடி பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு வீதிகள் செப்பனிடும் பணிகள் இன்று 28.07.2021 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் எஸ்.சர்வானந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீதி செப்பனிடும் ஆரம்ப நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் வி.பற்குணன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.நித்தியானந்தன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட தமிழ ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,
No comments: