கல்குடா மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும்
பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை கட்டியொழுப்புதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கல்குடா மீடியா போரம் பிரதேசத்தின் சமூக செயற்பாட்டாளர் எம்.எம்.ஹலால்தீன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ் உதவி ஊடகவியலாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இதன் போது ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர்,பிரதேச சபை உறுப்பினர்கள், ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ் உள்ளிட்ட பிரதேசத்தின் தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கான ஒழுங்குகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்ஷித், ஊடகவியலாளர் எச்.எம்.பர்ஸான் ஆகியோர் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: