News Just In

7/05/2021 07:34:00 AM

2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டது...!!


2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சார்த்திகள் தங்களது விண்ணப்பங்களை இன்று முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் தமது விண்ணப்ப படிவங்களை குறித்த காலப்பகுதியில் சமர்பிக்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றை வெகுவிரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்தாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்

செயன்முறை பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் ஒரு வார காலத்திற்குள் உறுதியான தீர்மானமொன்றை பரீட்சைகள் திணைக்களத்திற்கு வழங்குவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: