News Just In

7/16/2021 07:09:00 PM

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் விடுவிப்பு...!!


முல்லைத்தீவு விமானப்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தான் உட்பட தமது சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த 16 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் கடந்த 8 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

No comments: