News Just In

6/05/2021 07:52:00 PM

கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின்(CTCT) பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா நிவாரண உதவித் திட்டம்...!!


கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள பாணமை அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கனடிய தமிழர் அறக்கட்டளை நிதியம் மற்றும் ஜீவாதாரம் அறக்கட்டளை நிதியம் ஆகியன இணைந்து வாழ்வாதார உதவிகள் வழங்கி வைத்தன.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் மற்றும் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோருக்குமாக 4900ரூபாய் பெறுமதியான 85 குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தன.

குறித்த திட்டத்தினை கனடிய தமிழர் அறக்கட்டளை நிதியத்துடன்(CTCT) இணைந்து கனடாவில் வசிக்கும் திரு.K.இரவீந்திரன், அக்கரைப்பற்று பிரதேசத்தை சேந்த திரு.S.பரநாதன் மற்றும் ஜீவாதாரம் அறக்கட்டளை நிதியம் ஆகியன இணைந்து மேற்படி வாழ்வாதார உதவி திட்டத்துக்கான நிதி உதவிகளை வழங்கி அமுலாக்கின.







No comments: