மாவட்டத்தில் தொடர்ச்சியாக எழுமாறாக அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனார். இந்த நிலையில் ஏறாவூர் நகர் கிராமசேவகர் 2 பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக கண்டறியப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த கிராம சேவகர் பிரிவை தனிமைப்படுத்தி முடக்க தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்றில் இருந்து ஏறாவூர் நகர் கிராமசேவகர் பிரிவு 2 தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட வாழைச்சேனை கல்மடு கிராம சேவகர் பிரிவு இன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments: