News Just In

6/05/2021 08:12:00 PM

மட்டக்களப்பு- ஏறாவூரின் கிராமசேவகர் பிரிவு-02 தனிமைப்படுத்தலில்- வாழைச்சேனை கல்மடு கிராமசேவகர் பிரிவு விடுவிப்பு...!!


மட்டக்களப்பு ஏறாவூர் நகரின் கிராமசேவகர் பிரிவு 2 இன்றில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்படுவதுடன், தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட வாழைச்சேனை கல்மடு கிராமசேவகர் பிரிவு இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இன்று சனிக்கிழமை (06) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடர்ச்சியாக எழுமாறாக அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனார். இந்த நிலையில் ஏறாவூர் நகர் கிராமசேவகர் 2 பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்து குறித்த கிராம சேவகர் பிரிவை தனிமைப்படுத்தி முடக்க தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்றில் இருந்து ஏறாவூர் நகர் கிராமசேவகர் பிரிவு 2 தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட வாழைச்சேனை கல்மடு கிராம சேவகர் பிரிவு இன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: