நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, இன்றைய தினம் (07) மட்டக்களப்பு நகர் பகுதியில் பயணகட்டுப்பாட்டை மீறி வெளியே செல்வோர்களை கட்டுப்படுத்தவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதிருப்போரை கண்காணிக்கவும், அத்தியாவசிய தேவைகளின் பொருட்டு வெளியில் செல்வோரை கண்காணிக்கவும் பொலிஸாரினால் மேற்படி சோதனை நடவடிக்கைகள் மட்டக்களப்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
No comments: