மண்முனைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயம், திருச்செந்தூர் விபுலானந்தா வித்தியாலயம், நாவற்குடா கிழக்கு சாரதா வித்தியாலயம் ஆகிய இடங்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மேற்படி கொரோனா தடுப்பூசியானது ஏற்றப்பட்டது.
குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் அரசாங்க அதிபருமான கே.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவ பிரதானி 23ஆம் படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனரல் நலின் கொஸ்வத்த, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
குறித்த தடுப்பூசி வழங்கப்பட்ட இடங்களில் பொதுமக்கள் பூரண ஆதரவுடன் ஏறாளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசியினை பெற்று சென்றதை காணக்கூடியதாக உள்ளது.
No comments: