News Just In

6/07/2021 08:57:00 PM

உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் மரணங்களுக்கு நீங்களே காரணமாக அமைய வேண்டாம்- வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக்...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

கடந்த 4 ஆம் திகதி குறித்த பகுதியில் 52 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் கொரோனா தொற்று காரணமாக ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

ஆகவே, தேவையின்றி வீதிகளில் அலைந்து திரிந்து வீட்டிலுள்ள முதியோருக்கும் சிறியவர்களுக்கும் கொரோனா தொற்றை கொடுத்து உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் மரணங்களுக்கு நீங்களே காரணமாக அமைய வேண்டாம்.

அரசாங்கம் பிறப்பித்துள்ள சட்டதிட்டங்களை மதித்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: