News Just In

6/01/2021 03:39:00 PM

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் சீல் வைக்க தீர்மானம்...!!

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் சீல் வைக்க மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக சீல் வைக்கப்படுவதாக அவர் மே்லும் தெரிவித்தார்.

No comments: